Sep 13, 2017 07:32 PM

ஸ்ரேயாவை கோபப்படுத்திய அந்த கேள்வி!

ஸ்ரேயாவை கோபப்படுத்திய அந்த கேள்வி!

கடந்த 18 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நாயகியாக வலம் வரும் ஸ்ரேயா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 35 வது வயதில் அடியெடுத்து வைத்தார்.

 

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் அவரிடம் “எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, பெரும் கோபமடைந்த ஸ்ரேயா, ”இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம். அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது.

 

பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது. அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்று சூடாக பதில் அளித்துள்ளார்.

 

ஸ்ரேயாவின் இந்த பதில் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.