Sep 14, 2017 07:13 PM

ஏ சான்றிதழை சந்தோஷமாக பெற்றுக்கொண்ட தயாரிப்பாளர்!

ஏ சான்றிதழை சந்தோஷமாக பெற்றுக்கொண்ட தயாரிப்பாளர்!

ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து தமிழகத்தில் திரைப்படங்களுக்கு இருந்த வரி விலக்கு சலுகை ரத்தானதால், யு சான்றிதழ் வாங்குவதற்கு எந்த தயாரிப்பாளரும் முனைப்பு காட்டுவதில்லை. அதேபோல், படத்தின் தலைப்பையும் கண்ணாபின்னாவென்று வைக்க தொடங்கி விட்டார்கள்.

 

இந்த நிலையில், தணிக்கை குழு தனது படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரொம்ப சந்தோஷப்பட்டுள்ளாராம்.

 

அவர் தயாரித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம் ஆபசமாக உருவாகியுள்ளது. கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. டிரைலர் முழுவதுமே ஒரே ஆபாசமான வசனங்களாக இருந்தது. டிரைலரே இப்படி என்றால் முழு படம் எப்படி இருக்குமோ! என்று பலர் அச்சப்படுகிறார்கள்.

 

ஆனால், படத்தை தயாரித்த ஞானவேல்ராஜா எந்தவித கூச்சமும் இன்றி, ஏதோ சமூகத்தை திருத்துவது போன்ற ஒரு படத்தை எடுத்துவிட்டது போல ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். காரணத்தை விசாரித்தால், சமீபத்தில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்களாம். ஏ இருந்தால் தான் எங்ஸ்டர்கள் தியேட்டர் உள்ளே வருவார்கள் என்ற எண்ணத்தில், தனது படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை ஞானவேல்ராஜா சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாராம்.