Sep 16, 2017 05:44 AM

பட வாய்ப்புகள் குறைந்ததால் அடியாளான பரத்!

பட வாய்ப்புகள் குறைந்ததால் அடியாளான பரத்!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான பரத், ‘காதல்’ படம் மூலம் ஹீரோவாகி பிரபலமடைந்தார். இடையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், அவரது படங்கள் பல எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் வாய்ப்புகள் குறைந்தது.

 

இதனை தொடர்ந்து சில இந்தி படங்களில் நடித்த பரத் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி ‘கடுகு’ படத்தில் வில்லத்தனம் கலந்த கேரக்டர் ரோலில் அவர் நடித்தார். ஆனால், அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும், பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொட்டு’, ‘கடைசி பெஞ்ச் கார்த்திக்’ ஆகிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால், பரத் அடியாளாகியுள்ளார். ஆம், மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தில் மெயின் வில்லனான எஸ்.ஜே.சூர்யாவுக்கு பரத் தான் அடியாளாம். எஸ்.ஜே.சூர்யா போடும் திட்டங்களை செயல்படுத்தும் அடியாளாக பரத் நடித்திருக்கிறார்.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.