Sep 17, 2017 04:05 AM

ரிவைஸிங் கமிட்டியில் யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘உறுதிகொள்’

ரிவைஸிங் கமிட்டியில் யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘உறுதிகொள்’

ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. ‘பசங்க’ பட புகழ் மாஸ்டர் கிஷோர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இப்படம் ரிவைஸ் கமிட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிவைஸ் கமிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

இது குறித்து கூறிய இயக்குநர் ஆர்.அய்யனார், “அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன். ஆனால், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் ஏ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். முகம் சுழுக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். படம் விரைவில்  திரைக்கு வர உள்ளது.” என்றார்.