Sep 19, 2017 11:17 AM

முடிந்தது ‘மெர்சல்’ - இந்தியாவை விட்டு கிளம்பினார் விஜய்!

முடிந்தது ‘மெர்சல்’ - இந்தியாவை விட்டு கிளம்பினார் விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளியன்று வெளியாகியுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தற்போது ‘ஸ்பைடர்’ பணிகளில் பிஸியாக உள்ள முருகதாஸ் அபப்டத்தின் ரிலிஸிற்கு பிறகு, விஜய் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.

 

இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பணிகளும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து விஜய் இந்தியாவை விட்டே கிளம்பிவிட்டார்.

 

ஏற்கனவே தனது குடும்பத்தாரை பார்சிலோனாவுக்கு அனுப்பி வைத்த விஜய், மெர்சல் படத்தின் வியாபாரம் சம்மந்தமான சில பணிகள் இருந்த காரணத்தால், தனது குடும்பத்தாருடன் செல்லவில்லையாம். நேற்று எஞ்சியிருந்த பணியும் முடிந்ததால், இன்று விஜய் பார்சிலோனாவுக்கு கிளம்பிவிட்டார். சென்னையிலிருந்து துபாய்க்குச் சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார். 

 

தனது குடும்பத்தோடு பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ள விஜய், ‘மெர்சல்’ படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளாராம்.