Sep 19, 2017 12:53 PM

காத்திருக்கும் ஓவியா - கவிழப்போகும் விஜய் டிவி!

காத்திருக்கும் ஓவியா - கவிழப்போகும் விஜய் டிவி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் பிரபலமடைந்துள்ள நடிகை ஓவியா, அதே நிகழ்ச்சியால் பெரும் மன உலைச்சலுக்கும் ஆளானார் என்பது உலகமே அறிந்தது. ஆனால், அறியாத பல விஷயங்கள் அவரது மனதிற்குள் புதைந்துள்ளது.

 

ஆரவுடனான காதல், அதனால் ஏற்பட்ட தோல்வி என்று பித்து பிடித்தது போல பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்த ஓவியா, தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறப்பட்டு பிறகு போலீசார் அந்த வீட்டுக்குள் எண்ட்ரியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓவியாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து நிகழ்ச்சி குழுவினர் வெளியேற்றினார்கள். 

 

இந்த நிலையில், தன்னை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த விஜய் டிவி செய்த சில வேலைகள் குறித்து ஓவியா மனம் திறந்து தனது ரசிகர்களிடம் விரைவில் கூற இருக்கிறார்.

 

இது குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்கள் பலர் லைவ் சேட்டில் நான் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடியாமல் நான் யாரிடமும் பேசக்கூடாது என்ற அக்ரிமெண்ட் இருப்பதால்,  என்னால் லைவ் சாட்டில் வரமுடியவில்லை. பிக் பாஸ் 100 நாட்கள் முடியட்டும், நான் லைவ் சாட்டுக்கு வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆக, பிக் பாஸ் முதல் சீசன் முடிந்ததும், அந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த விஜய் டிவி செய்த டிராமா மற்றும் தில்லாலங்கடி வேலைகள் குறித்து ஓவியா தனது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, ஊடகத்தினருக்கும் தெரிவிப்பது போல் அவரது டிவிட் அமைந்திருப்பதால், பிக் பாஸ் மூலம் நிமிர்ந்த விஜய் டிவி, ஓவியாவால் கவிழப்போவது உறுதியாகிவிட்டது.