Oct 03, 2017 03:40 AM

மீண்டும் இணையும் சிம்பு - அனிருத் : என்ன நடக்க போகிறதோ!

மீண்டும் இணையும் சிம்பு - அனிருத் : என்ன நடக்க போகிறதோ!

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசயமைத்து வருகிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

இந்த நிலையில், பீப் பாடல்கள் மூலம் இணைந்த சிம்பு - அனிருத் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர்கள் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக இணைந்துள்ளார்கள்.

 

இந்தப் படத்தில் 'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு. சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

பீப் பாட்டால் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று அலைந்துக் கொண்டிருந்த சிம்புவும், அனிருத்தும் இந்த கலகக்கு மச்சான்...பாட்டால் எங்கெல்லாம் அலையப்போகிறார்களோ! என்று சிலர் கிண்டலாக பேசு வருகிறார்கள்.