Oct 04, 2017 07:08 PM

பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

 

கவுரி லங்கேஷ் கொலையை சிலர் கொண்டாடுவதாகவும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள், என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதினால், அவர் என்னை விட சிறந்த நடிகராக முயற்சிக்கிறார், என்றும் தெரிவித்தார்.

 

பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.