Oct 08, 2017 11:30 AM

வித்யா பாலன் முன்பு சுயஇன்பம் அனுபவித்த வாலிபர்! - பாலிவுட்டில் பரபரப்பு

வித்யா பாலன் முன்பு சுயஇன்பம் அனுபவித்த வாலிபர்! - பாலிவுட்டில் பரபரப்பு

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வரும் வித்யா பாலான், பல துணிச்சலாம வேடங்களிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், தனது கல்லூரி நாட்களில் நடந்த சம்பவம் ஒன்றை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

வித்யா பாலன் கல்லூரியில் படித்த போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது பற்றி தற்போது கூறிய வித்யா பாலன், ”கல்லூரி முடிந்து நான் வீட்டுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். நான் பயணம் செய்தது பெண்கள் பயணிக்கும் பெட்டி.

 

பெண்கள் பெட்டியில் ஒரு ஆண் ஏறினார். இது பெண்கள் பெட்டி என்று கூறியதற்கு தெரியாமல் ஏறிவிட்டேன் அடுத்த ஸ்டேஷனில் மாறிக் கொள்கிறேன் என்றார்.

 

பெண்கள் பெட்டியின் வாசலில் நின்ற அந்த ஆள் திடீர் என்று பேண்ட் ஜிப்பை திறந்து சுயஇன்பம் அனுபவித்தார். இதை பார்த்த நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

 

அந்த நபர் செய்த அசிங்கத்தை பார்த்து அனைத்து பெண்களும் கண்களை மூடிக்கொள்ள நான் மட்டும், என் கையில் இருந்த புத்தகத்தை வைத்து அவரை அடித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டேன். ரயில் ஸ்டேஷனுக்கு வந்ததால் அவர் அன்று உயிரிழக்கவில்லை.” என்று தெரிவித்தார்.