Oct 13, 2017 02:16 PM

நடிகர் சந்தானத்திற்கு முன் ஜாமீன் கிடைத்தது!

நடிகர் சந்தானத்திற்கு முன் ஜாமீன் கிடைத்தது!

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், கட்டுமான நிறுவனத்தின் முதலாளி சண்முகசுந்தரம் என்பவருக்கும், நடிகர் சந்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. சண்முகசுந்தரத்தை நடிகர் சந்தானம் அடித்ததாகவும், அதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, போலீசிலும் சந்தானம் மீது புகார் அளித்தார்.

 

அதேபோல், சந்தானமும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, போலீசில் சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீதும் புகார் அளித்தார்.

 

இது தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தானத்தின் மீது மூன்று பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான சந்தானம், இந்த வழக்கு முன் ஜாகீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தானத்திற்கு நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கியுள்ளார்.