Oct 14, 2017 04:30 AM

சீரியல் நடிகை ஷில்பாவின் விபரீத முடிவு!

சீரியல் நடிகை ஷில்பாவின் விபரீத முடிவு!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் சுமார் 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. ‘சித்தி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பதிலே ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு காரணம், வில்லியாக நடித்தால் தான் தனது திறமையை முழுமையாக வெளிக்காட்ட முடியும், என்று அவரே கூறியுள்ளார்.

 

சீரியல் மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் சிறு வேடத்தில் நடித்திருக்கும் ஷில்பா, நடனத்திலும் அசத்துவார்.

 

சரி அது போகட்டும், விஷயத்திற்கு வருவோம். ஷில்பாவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் சீரியலில் நடிக்க தொடங்கிய பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக ஷில்பா மட்டும் இனும் சிங்கிளாகவே இருக்கிறார்.

 

ஏன் அப்படி? என்று அவரிடம் கேட்டதற்கு, “எனது அப்பா போன்ற ஒரு நல்லவரை நான் இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க போவதில்லை. அதனால் நான் திருமணமும் செய்துகொள்ள போவதில்லை.

 

திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து வாங்கி அப்பாவுடன் வாழ்வதை காட்டிலும், திருமணம் செய்யாமலேயே அப்பாவுடன் வீட்டில் வாழ்வதே சந்தோஷமாக இருக்கிறது. அதனால், எனது வாழ்க்கையில் நோ திருமணம். என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.” என்று கூறுகிறார்.