Oct 16, 2018 08:43 AM
நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
பிரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஜீ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் அம்பத்தூரில் உள்ள ஜாய்ண்ட் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
லஷ்மி ராமகிருஷ்ணன் வசிக்கும் பகுதியில் சுமார் ரூ. 150 கோடி முறைகேடு சம்மந்தமாக தட்டி கேட்ட போது, அவரை வெளி ஆட்கள் மூலம் மிரட்டியதோடு, ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.
மேலும், சின்னத்திரையில் நிகழ்ச்சி தொடர்பாளராக பணியாற்றியதை கேவலமான வார்த்தையில் பேசியும் திட்டியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு தனது புகார் மனுவில் லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.