Jun 22, 2018 04:02 AM

போலீஸை விமர்சித்து கைதான சீரியல் நடிகைக்கு 15 நாட்கள் ரிமாண்ட்!

போலீஸை விமர்சித்து கைதான சீரியல் நடிகைக்கு 15 நாட்கள் ரிமாண்ட்!

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், சீரியல் நடிகை நிலானி, போலீஸ் உடையை அணிந்துக்கொண்டு, தூத்துக்குடி சம்பவம் குரித்து பேசியதோடு, காவல் துறையை கடுமையாக விமர்சித்து பேசினார்.

 

படப்பிடிப்புக்காக போலீஸ் உடையை அணிந்துக் கொண்டிருந்த அவர், ”போலீஸ் உடையை அணியவே உடம்பு கூசுவதாக” தெரிவித்திருந்தார். வாட்ஸ்-அப்பில் வெளியான அவரது வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, நிலானியும் பிரபலமானார்.

 

இந்த நிலையில், குன்னூரில் வைத்து நிலானியை கைது செய்த போலீஸார், குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்ற் காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 

பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.