Oct 08, 2018 09:07 AM

நடிகை பிரியா பவானி சங்கரின் திடீர் ஸ்டேட்மெண்ட்!

நடிகை பிரியா பவானி சங்கரின் திடீர் ஸ்டேட்மெண்ட்!

டிவி சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியதோடு அப்படத்தின் மூலம் சினிமா நடிகையாகவும் பிரபலமானார்.

 

‘மேயாத மான்’ படத்தை தொடர்ந்து கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தவர், தற்போது எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தனது ரசிகர்களுக்கு திடீர் ஸ்டேட்மெண்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதாவது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கருக்கு, என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதற்கிடையே, அவரது பெயரில் போலியான சமூக வலைதளப் பங்கள் பல உருவாகியுள்ளதால், அதன் மூலம் வரும் பதிவுகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம், என்று அவர் கூறியுள்ளார்.

 

மேலும், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் விளக்கம் அளித்தவர், தனது ஒரிஜினல் சமூக வலைதள பக்கம் எது, என்பதையும் அந்த வீடியோவில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

நடிகர், நடிகைகள் பெயரில் போலியாக சமூக வலைதள பக்கங்கலை தொடங்குபவர்கள், அதில் பல தவறான கருத்துக்களையும், சர்ச்சையான விஷயங்கள் குறித்து பதிவிடுவதால், அது சம்மந்தப்பட்ட நடிகர்களை ரொம்பவே பாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.