Oct 23, 2018 07:11 AM

திருமண வாழ்க்கையை ரகசியம் காக்கும் ஸ்ரேயா! - காரணம் இது தான்

திருமண வாழ்க்கையை ரகசியம் காக்கும் ஸ்ரேயா! - காரணம் இது தான்

விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, வெளிநாட்டு விளையாட்டு வீரரை காதலித்து திடீர் திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்காக தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருபவர், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் அனுப்பி வருகிறார்.

 

விரைவில் வெளியாக உள்ள ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, ‘எ லிட்டில் பேர்டு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை பெண் இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.

 

இப்படம் குறித்து கூறிய ஸ்ரேயா, ”சினிமா ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குநர்களாவதை பார்க்க பெர் உமையாக உள்ளது. கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறை பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குநர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால், அந்த படத்திலும் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும் போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்? சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

 

மேலும், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய ஸ்ரேயா, “திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும்  என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதும் பேச மாட்டேன்.” என்றார்.