Aug 08, 2018 02:20 PM

கலைஞர் கையால் வாங்கிய விருது! - நினைவு கூர்ந்த அமிதாப் பச்சன்

கலைஞர் கையால் வாங்கிய விருது! - நினைவு கூர்ந்த அமிதாப் பச்சன்

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடலுக்கு சினிமா பிரமுகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நேரில் வர முடியாத பலர் சமுக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், ட்விட்டர் மூலம் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், சிறந்த தலைவராகவும், உறுதியான தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். எனது முதல் தேசிய விருதை நான் அவர் கையில் தான் வாங்கினேன்.

 

சென்னையில் தேசிய விருது வழங்கும் விழா நடந்த போது அவர் தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அப்போது அவர் கையில் விருது வாங்கியதில் நான் மகிழ்ந்தேன், என்று தெரிவித்துள்ளார்.