’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’!
வட சென்னையை மையமாக வைத்து வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்ற படம் ‘அட்டு’. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரிஷி ரித்விக், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக் திறமையோடு கையாண்டதோடு, அந்த கதாபாத்திரத்திற்காக பல விஷயங்களை ரியலாக செய்து பாராட்டு பெற்றார். அதிலும், அப்படத்தில் இடம்பெற்ற கத்தி சுற்றும் காட்சி ஒன்றை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, அந்த அளவுக்கு அக்காட்சியின் ரிஷி மிரட்டியிருப்பார்.
தற்போது, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ரிஷி ரித்விக், நடிப்பில் ‘மரிஜுவானா’ என்ற படம் உருவாகிறது. இதில் ஹீரோயினாக ஆஷா நடிக்கிறார்.
தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் (Third Eye Creations) சார்பில் எம்.டி.விஜய் தயாரிக்கும் இப்படத்தை எம்.டி.ஆனந்த் இயக்குகிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், சரவணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ராஜு முருகன், ஒளிப்பதிவாளர் செல்வா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
இயக்குநர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது. மேலும், நடிகர் யோகி பாபு படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.