வீட்டில் நடந்த சோகமான சம்பவம் - பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி!
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் வெற்றி வாய்ப்பு உள்ள போட்டியாளர்களில் ஜனனியும் ஒருவர். யாரிடமும் கெட்டப் பெயர் எடுக்காமல் சமத்து பிள்ளையாக இருக்கும் ஜனனி வீட்டில் தற்பொது ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து எதுவும் தெரியாமல் அவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பது அதை விடவும் சோகம்.
ஜனனியின் தாய் மாமா இறந்துவிட்டாராம். ஆனால், இதை ஜனனிக்கு அவரது குடும்பத்தார் தெரிவிக்கவில்லையாம். விஷயம் தெரிந்தால் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து பாதியில் விலகிவிட கூடும் என்பதால், அவரிடம் இருந்து இந்த சோக செய்தியை மறைத்திருக்கிறார்கள்.
இது குறித்து ஜனனியின் தங்கை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதோடு, தனது அக்கா ஜனனி பற்றியும் பேசியுள்ளார்.
அப்பாவுக்கு செல்லப் பிள்ளையான ஜனனி எப்போது வீட்டில் நடந்து கொல்வது போல தான் பிக் பாஸ் வீட்டிலும் இருப்பதாக தெரிவித்தவர், ஜனனியை வீட்டில் செல்லமாக அச்சு என்று அழைப்பார்கள், என்பதையும் கூறினார்.