Sep 11, 2017 02:51 PM

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து - கருணை காட்டுவாரா ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து - கருணை காட்டுவாரா ஓவியா!

இந்தி சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் சக்கை போடு போட்டாலும், தற்போது பார்வையாளர்களை இழந்து, டி.ஆர்.பி-யிலும் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆரம்பத்தில் ஜூலி, பிறகு ஓவியா என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கிய இந்த இரண்டு பெண்களும் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கியது. பிறகு ஓவியா இல்லாத குறையை போக்க வேண்டும் என்று, ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரவைக்கப்பட்டாலும், நிகழ்ச்சி சூடு பிடிக்காமல் மந்தமாகவே போய்க்கொண்டிருக்கிறது.

 

இதனால், பதற்றம் அடைந்த விஜய் டிவி ஓவியாவை எப்படியாவது மீண்டும் வீட்டுக்குள் அடைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. மேலும், ஓவியாவுக்கு ஒரு எபிசோட்டுக்கு அதாவது வாரத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.5 லட்சத்தை தினமும், அதாவது ஒரு நாளுக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறியதாம். ஆனால், எதற்கும் மசியாத ஓவியா, இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்பதில் ரொம்ப உறுதியாக உள்ளாராம்.

 

ஓவியாவை தவிர்த்து வேறு எந்த எந்த விஷயங்களை வைத்து நிகழ்ச்சியை மீண்டும் பரபரப்பாக்களாம் என்று பிக் பாஸ் குழு கூடி கூடி பேசினாலும் நிகழ்ச்சி மட்டும் பழைய நிலைக்கு திரும்பாமல் நொட்டியடிக்கிறதாம். இப்படியே நிலை தொடர்ந்தால், முதல் எப்பிசோடு பிக் பாஸ் நிகழ்ச்சி மூட்டைக்கட்டப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால், எப்படியாவது ஓவியாவை மீண்டும் நிகழ்ச்சி அழைத்து வந்துவிட வேண்டும் என்று, நிகழ்ச்சி குழுவினர் கஜினி போல தொடர்ந்து ஓவியா மீது படையெடுத்து வருகிறார்களாம்.

 

பார்ப்போம் ஓவியா அவர்களுக்கு கருணை காட்டுவாரா என்று!