Feb 25, 2018 04:32 AM

கெளதமி கமலுடன் மீண்டும் சேர்ந்துவிட்டாரா? - கெளதமியின் விளக்கம்

கெளதமி கமலுடன் மீண்டும் சேர்ந்துவிட்டாரா? - கெளதமியின் விளக்கம்

‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன், கெளதமியை திருமணம் செய்துக் கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்தார். திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இவர்களது பிரிவுக்கான காரணம் குரித்து இருவரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், பிரிவுக்கு பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் எந்த கருத்தும் கூறவில்லை.

 

இதற்கிடையே, கமலுடன் கெளதமி மீண்டும் சேர்ந்துவிட்டதாகவும், அவர் கமலுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், கெளதமி தனது பிளாக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

 

’Past is Past – and there are strong reasons for it’ என்ற தலைப்பில் கெளதமி எழுதியுள்ள விளக்க கடிதத்தில், தன கமலுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.