Jun 18, 2018 01:15 PM
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை!
சினிமாவைப் போல சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழில் பிரபல சீரியல் நடிகர், இயக்குநர் என்று பலர் தற்பொலை செய்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்த தேஜஸ்வனி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பவன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட தொகுப்பாளினி தேஜஸ்வனியின், தற்கொலை தெலுங்கு திரையுலகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.