Aug 11, 2018 01:17 PM

கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி!

கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி!

கேரளாவில் பெய்து வரும் தொடர் கன மழையால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் மன் சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளது. மேலும், இதுவரை மழை வெள்ளத்தால் பலியாணவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் நிதி அறிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்கள்.

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததை அறிந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, இருவரும் இணைந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 வழங்குகிறார்கள்.