Aug 08, 2018 07:43 AM

கருணாநிதியின் மறைவு முற்றுப்புள்ளி அல்ல.. - கமல்ஹாசன்

கருணாநிதியின் மறைவு முற்றுப்புள்ளி அல்ல.. - கமல்ஹாசன்

சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான். உணர்வும், இந்த சூழலும் குரலை உயர்த்த முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கியுள்ளது. எனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்றார்.