Jan 19, 2018 01:28 PM

‘கால பைரவா’ வை மீண்டும் கையில் எடுத்த லாரன்ஸ்!

‘கால பைரவா’ வை மீண்டும் கையில் எடுத்த லாரன்ஸ்!

‘முனி 3’, ‘காஞ்சனா 2’ ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களுக்கு பிறகு ‘முனி 4’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது ‘கால பைரவா’ படத்தையும் கையில் எடுத்துள்ளார். 

 

காஞ்சனா 3 படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் ‘கால பைரவா’ படத்தை தனது ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாகவே தயாரிக்கவும் உள்ளார்.

 

தற்போது, ‘கால பைரவா’ படத்தின் வேலைகளை தொடங்கினாலும் ‘காஞ்சன 3’ பட ரிலிஸிற்கு பிறகே கால பைரவா படத்தை வெளியிட முடிவு செய்துள்ள லாரன்ஸ், மேலும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். இப்படங்கள் குறித்த தகவல்களை வரும் மார்ச் மாதம் அறிவிக்க முடிவு செய்துள்ளார்.