Feb 24, 2018 11:30 AM

தியேட்டரில் தயாரிக்கப்படும் திருட்டு விசிடி! - வருத்தத்தில் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்

தியேட்டரில் தயாரிக்கப்படும் திருட்டு விசிடி! - வருத்தத்தில் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய எதிரியாக திருட்டு விசிடி விளங்குகிறது. இந்த திருட்டி விசிடி-யை ஒழிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், தமிழக திரையரங்குகளில் கேமரா வைத்து திருட்டு விசிடி தயாரிக்கப்படுவதாக சமீபத்தில் வெளியான ‘மனுஷனா நீ’ திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது குறித்து கஸாலி கூறுகையில், “இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும், தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

 

1பாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்த தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது, என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்த தியேட்டர் மீது போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.

 

இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டுக்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஏற்படுகிறது.” என்று தெரிவித்தார்.