Jan 10, 2018 05:39 AM

போலீஸிடம் பிடிபட்ட பிரபல சீரியல் நடிகை! - ரசிகர்கள் அதிர்ச்சி

போலீஸிடம் பிடிபட்ட பிரபல சீரியல் நடிகை! - ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்கள். இவர்களது சமூக வலைதளம் உள்ளிட்ட அனைத்திலும் ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டுகிறது.

 

அப்படிப்பட்ட பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா. பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான இவர், நடிப்பு மட்டும் இன்றி நடனம், டப்ஸ்மேஷ் போன்ற பல வகைகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த ஆல்யா, தன்னை போலீஸ் கைது செய்த கதையை சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். அதுவும் ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்டாராம்.

 

ஆல்யாவும், அவரது சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதிவண்டியில் இருவர் பயணம் செய்வது தவறான விஷயமாம். இதை தெரியாமல் அவர் பயணம் செய்ய போலீசார் அவர்களை மிரட்டியுள்ளனர். பின் தெரியாமல் செய்துவிட்டோம் என்று கூறியதால், அவர்களை போலீஸ் மன்னித்துவிட்டதாம்.