மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பா! - வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.
இந்திரன் பத்மநாதன் என்ற கனடா தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்ட ரம்பா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். பிறகு அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில காலங்கள் பிரிந்து வாழ்ந்தவர், தற்போது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ரம்பா, மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்த நிலையில், ரம்பாவின் கணவர் இந்திரன், தனது மனைவிக்கு சமீபத்தில் சீமந்தம் செய்துள்ளார். முதல் முறை கர்ப்பமாகும் போது மட்டுமே சீமந்தம் செய்வது தான் வழக்கம், ஆனால் இந்திரன் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ள தனது மனைவி ரம்பாவுக்கு சீமந்தம் செய்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.