Apr 25, 2018 05:37 AM
துபாய் நாட்டு மருமகளான தமிழ் நடிகை!
விதார்த் ஹீரோவாக நடித்த ‘வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து ‘பப்பாளி’, ’சதுரங்க வேட்டை’ ஆகியப் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் யாரென்று தெரிகிறதா’ மற்றும் ‘பப்பரப்பாம்’ ஆகிய படங்கள் ரிலிஸுக்கு காத்திருக்கின்றன.
இந்த நிலையில், இஷாரா நாயருக்கு திடீர் திருமணம் நடந்திருக்கிறது. துபாய் வாழ் இந்தியரான சாஹில் என்பவருக்கும் இஷாரா நாயருக்கும் கடந்த 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஷாரா நாயர் - சாஹில் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.