Mar 22, 2018 04:49 PM

தியேட்டர் வேலை நிறுத்தம் வாபஸ் - நாளை முதல் தியேட்டர்கள் திரப்பு!

தியேட்டர் வேலை நிறுத்தம் வாபஸ் - நாளை முதல் தியேட்டர்கள் திரப்பு!

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த திரையரங்க வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்கங்கள் திறக்கப்படுகின்றன.

 

8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூடி தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

இன்று மாலை திரையரங்க உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

 

அதன்படி, நாளை (மார்ச் 23) முதல் தமிழகம் முழுவதும் வழக்கம் போல திரையரங்கங்கள் இயக்கப்படுகின்றது.