விஜய் கொடுத்த பெரிய தொகை! - பிரபலம் சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்கு பொது மக்கள் ரசிகர்களாக இருப்பதோடு, பல பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் விஜயுடன் நெருங்கு பழகுபவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி அவருடன் பழகும் போது அவர் குறித்த பல ஆச்சரியமான தகவல்களை சிலர் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல நடன இயக்குநரான ஷோபி, விஜயின் பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியதோடு அவருடன் நெருங்கியும் பழகி வருகிறார்.
‘சர்கார்’ படத்திலும் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் ஷோபி, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து வெளிவராத தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, விஜய் ரொம்பவே குழந்தைத்தனமும், குசும்புத்தனமும் கொண்டவராம். இது அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்குத் தான் தெரியும், என்று கூறிய ஷோபி, விஜய் நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும், தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஷோபி நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். அவரிடம் விஜய் திடீரென்று பெரிய தொலை ஒன்றை கொடுத்து, எதாவது நல்ல காரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள், என்றாராம். அதேபோல், தான் உதவி செய்ததை வெளியில் சொல்ல கூடாது என்றும் கேட்டுக்கொண்டாராம்.
பிறகு இந்த விஷயம் தெரிந்துவிட்டதால், ஷோபியும் இது குறித்து பலரிடம் கூறியதாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
நிறைய உதவிகளை செய்யும் விஜய், தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பும் பணியாளர்களுக்காக ஒரு நாள் ஒதுக்கி அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு புகைப்படம் எடுப்பாராம்.