Apr 16, 2018 12:02 PM

மீண்டும் நடிக்க வரும் கேப்டன்! - இயக்குநர் யார் தெரியுமா?

மீண்டும் நடிக்க வரும் கேப்டன்! - இயக்குநர் யார் தெரியுமா?

150 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து, ரஜினி, கமல் உள்ளிட்ட எந்த ஒரு நடிகரும் செய்திராத சாதனையை சினிமாத் துறையில் செய்திருக்கும் விஜயகாந்த், அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் பாராட்டு விழாவில், அவர் மீண்டும் நடிக்க வருவார், என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது, விஜயகாந்தின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

நேற்று நடைபெற்ற விழாவில் திரைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி பேசியதோடு, அவருடன் பழகிய நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டனர். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, விஜயகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கூறியதோடு, “நானும் நீங்களும் அடுத்த வருடன் சேர்ந்து ஒரு படம் பண்றோம். இவர் தான் தயாரிப்பாளர்” என்று கூறி தயாரிப்பாளர் தாணுவை காட்டினார். அதே போல், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

 

பிறகு பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, “கலைத்துறை சீரழிந்துகொண்டிருப்பதை இங்கு பேசிய எல்லோரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். கேப்டனை வாழவைத்த கலைத்துறையை அழியவிடமாட்டார். கேப்டன் பழையபடி மீண்டும் நடிக்க வருவார்.” என்று தெரிவித்தார்.