Oct 04, 2017 09:42 AM

விஜய் டிவி-ன் புதிய தொடர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

88b6d3631ab784fcda54c310292021e2.jpg

விஜய் தொலைக்காட்சி முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியத்தை தொடங்கவுள்ளது. இந்த தொடர்கதை  வரும் அக்டோபர் 9 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

 

இந்த தொடரில் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி வரும். ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்கை தலை கீழாக மாறுகிறது.

 

விக்ரம் என்பவர் ஒரு IPS அதிகாரி. ஒரு பயணத்தின் போது சத்யா என்ற பெண்ணை பார்க்கிறார், இருவரும் காதல் வயப்படுகிறார்கள். விதியின் காரணமாக இருவரும் அதன் பிறகு சேர முடியாமல் போகிறது. மற்றொருபக்கம் போலீஸ் அதிகாரியின் ஒரே செல்ல மகள் மற்றும்  ஊர்க்காரர்கள்  அனைவருக்கும் செல்ல மகளுமான பெண்- சரண்யா. சூழ்நிலை காரணமாக அதே ஊரில் போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் விக்ரம் தான் தனது தந்தையின் சாவிற்கு காரணம் என்று ஒரு முடிவுக்கு வருகிறார். 

 

அதனால், ஊர்காரர்களும் சரண்யாவின் தந்தை சாவிற்கு ஒரு காரணமாக தோன்றும் விக்ரம் தான் இனி சரண்யாவின் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர். இதற்கு இணங்க விக்ரம் சரண்யாவை மணக்கிறார். அவரை தனது மனைவியாக ஏற்று கொண்டு அவரின் கனவுகளை நிறைவேற்றுவாரா? அதுமட்டுமல்லாமல்  தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நினைக்கும் சத்யா மற்றொருபக்கம். ஒவ்வொரு விதமான மனநிலையை கொண்ட கூட்டு குடும்பம். அந்த கூட்டு குடும்பத்தில் சரண்யாவை ஏற்று கொள்வார்களா? இப்படி இதை சுற்றி கதை அமையும்.

 

கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் புகழ் அமித் பார்கவ் தான் இந்த கதையில் விக்ரமாக நடிக்கிறார். மேலும் செய்தி வாசிப்பாளர் சரண்யா இந்த தொடரின் மூலம் நடிகையாக தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா இந்த தொடரில் சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடரை அப்துல் ஹபீஸ் என்பவர் இயக்குகிறார். மேலும் இளையவன் அவர்கள் இந்த தொடருக்கு இசை அமைக்கிறார்.