Dec 20, 2017 08:53 AM

விஜய் டிவியின் ‘நினைக்க தெரிந்த மனமே’

3fa629f9e0375460b9745c708f527878.jpg

விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஓர் நெடுந்தொடர், நினைக்க தெரிந்த மனமே ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் வரும் டிசம்பர் 25 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

 

இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும்  அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டும் இருக்கின்றது. 

 

அடிக்கடி தீபாவுக்கு சில காட்சிகள் 'நினைவுகள் போல வந்து செல்லும்போது அவருக்கு ஒரு பதட்டம் ஏற்படுகிறது.  அதை தவிர்த்து அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிக்கின்றார். ஆனால் அது நீடிக்கவில்லை ஒருநாள் அனைத்தும் நொறுங்கிவிடுகின்றது. அவள் உண்மை என்று நினைத்த வாழ்கை பொய் என்று தோன்றுகின்றது. அவரின் கடந்த வாழ்க்கையும் அவர் குடும்பமும் யார்? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன? 

 

இந்த தொடரில் ரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யா இந்த தொடர்கதையின் மூலம் தமிழ் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். கன்னட தொலைக்காட்சியின் பிரபலம் இவர். மேலும் நடிகை உமா ரியாஸ் அவர்கள் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர்கதையின் இயக்குனர் அழகர் மற்றும் ஒளிப்பதிவு கோபால். இந்த தொடர்கதை முற்றிலும் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் அமையும் ஒரு குடும்ப தொடராக இருக்கும்.