“பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” – நடிகை தீப்ஷிகா ஆதங்கம்

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தீப்ஷிகா, “பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது. ஆனால், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்போது தான் திறமைக்கு உண்மையான மதிப்பு கிடைக்கும்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்த தேர்வுக்கான முன் தயாரிப்பும், வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும். நானும் முன்பு நீட் தேர்வு மாணவி என்பதன் அடிப்படையில் இதை கூறுகிறேன்.

தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு இயக்கமாகவே தொடர வேண்டும். இதை அரசியல் நோக்கங்களுக்காக பிளவுபடுத்தக் கூடாது. இந்த இயக்கத்தின் மையமாக மாணவர்களின் நலன், சமத்துவம், பொறுப்பேற்றல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களாக இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

actress deepshikadeepshikadeepshika speaks about neet protestதீப்ஷிகாநீட் தேர்வு போராட்டம் குறித்து தீப்ஷிகா கருத்து
Comments (0)
Add Comment