நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் அவர் ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில், முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் நேற்று (செப்.13) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழங்கினார். இதனை, சங்க செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...
நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி...
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ஜீப்ரா’...