எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்த ‘டான்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்தியின், அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அவருக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீ வர்ஷினிக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது.
சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
'டான்' படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.
ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதல் படத்திலேயே இடம் பிடித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, தனது அடுத்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ரசிகர்களும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...
நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி...
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ஜீப்ரா’...