Latest News :

நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைத்திருக்கும் புதிய பொறுப்புகள்!
Wednesday September-25 2024

தமிழ் சினிமா நடிகையாகவும், பிரபல மாடலாகவும் வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு பிரபல ஒடிடி தளமான ஏபிசி டாக்கீஸ், தனது நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் பிராந்திய விளம்பர தூதராக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த புதிய பொறுப்புகளின் மூலம் அவர் ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்திற்கு வழிகாட்டியாக இருந்து அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்வார். கேளிக்கை துறையில் அவரது பரந்த அனுபவமும், வளர்ந்து வரும் இளம் திறமைகளை ஆதரிக்கும் அவரது ஆர்வமும், ஏபிசி டாக்கீஸ் குழுவிற்கு ஒரு மறக்க முடியாத பலமாக இருக்கும். பிராந்திய விளம்பரத் தூதராகவும், அவர் பிராந்திய சந்தைகளில் தளத்தை ஊக்குவிக்க முக்கிய பங்காற்றுவார், மேலும் புதிய திரைப்பட இயக்குனர்களை தங்களுடைய படைப்புகளை ஏபிசி டாக்கீஸில் காட்சியிட ஊக்குவிப்பார். 

 

இது குறித்து ஏபிசி டாக்கீஸ் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷாலிபத்ரா ஷா கூறுகையில், “சாக்‌ஷி அகர்வாலை எங்களின் ஆலோசனைக் குழுவின் இணைத்ததிலும், பிராந்திய விளம்பரத் தூதராகவும் நியமித்ததிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படத் துறையின் ஆழமான புரிதலும், புதிய திறமைகளுக்கு வழிகாட்டும் அவருடைய அர்ப்பணிப்பும், எங்கள் முக்கிய இலக்குகளுடன் இணைந்துள்ளன. அவருடைய பங்களிப்பு சுயாதீன திரைப்பட இயக்குநர்களை ஆதரிப்பதில் எங்களின் முயற்சிகளை மிகவும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

 

தனது பொறுப்புகள் பற்றி நடிகை சாக்‌ஷி அகர்வால் கூறுகையில், “இளம் திரைப்பட இயக்குனர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு தளமாக செயல்படும் ஏபிசி டாக்கீஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கதைக்களத்தின் சக்தியில் நம்பிக்கையுள்ளவளாகவும் புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்குவதின் அவசியத்தை உணர்வதாகவும் நான் நம்புகிறேன். ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பிராந்திய விளம்பரத் தூதராகவும் ஏபிசி டாக்கீஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நான் பங்களிக்க விரும்புகிறேன்.” என்றார். 

 

சுயாதீன திரைப்பட இயக்குநர்களுக்கு வெற்றி பெற தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க ஏபிசி டாக்கீஸ் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவரது நியமனம், கேளிக்கைத் துறைத்தளம் தனது தாக்கத்தையும் வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. 


Related News

10057

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery