இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு காட்சி அதிகாலையில் திரையிடப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது, பெரிய அளவில் கட்-அவுட் வைப்பது என்று மெர்சல் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ‘மெர்சல்’ படத்தின் பேனரை கட்ட குடிநீர் குழாய் சுவரின் மீது நான்கு பேர் ஏறிய போது சுவர் இடிந்து விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபலி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...