நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். ஆனால், இதை மறுத்த நடிகர் நிவின் பாலி, தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய் என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். அதற்காக நான் எந்தவித எல்லைக்கும் செல்வேன், என்று தெரிவித்தார். அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்து நிவின் பாலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிவின் பாலி குற்றம் சாட்டப்பட்ட பெண் சம்பவம் நடந்ததாக குறிப்பிட்ட இடத்தில், அவர் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அங்கு இல்லை, என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், அவர் நிரபராதி என்றும் அறிவித்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...