Latest News :

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் - சொன்னது யார் தெரியுமா?
Tuesday October-24 2017

‘மெர்சல்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், என்று ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

அவர் வேறு யாருமல்ல, விஜயின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏற்கனவே அரசியல் பாதையில் சென்ற விஜய் பல இன்னல்களை சந்தித்ததற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் தான் மிக முக்கிய காரணம்.

 

இந்த நிலையில், மெர்சல் விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. ஆனால், அரசியலுக்கு அவர் வருவது குறித்து அவர் தான் முடிவு எடுப்பார்.

 

விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ரஜினி, கமல், விஷால் என்று அரசியலில் ஈடுபட இருக்கும் நடிகர்களில் விஜயும் இணைந்துள்ளார்.

Related News

1069

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery