Latest News :

புதுமுகங்களை வைத்து சுசீந்திரன் இயக்கும் புது படம்!
Wednesday August-02 2017

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்து குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சுசீந்திரன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அப்படம், ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்று முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படமாகும். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதைக் கொண்ட இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறாராம்.

 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஒரு பெண்ணின் பெயர் இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டதோடு, இம்மாத இறுதியில் அந்த தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் சுசீந்திரன், தெரிவித்துள்ளார். படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related News

117

”’ஹிட்லர்’ எல்லோருக்கும் பிடிக்கும் ஜாலியான ஆக்‌ஷன் படமாக இருக்கும்” - விஜய் ஆண்டனி நம்பிக்கை
Monday September-16 2024

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஹிட்லர்’...

’டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
Monday September-16 2024

எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ...

”’மெய்யழகன்’ கதையை படிக்கும் போதே எனக்கு கண்ணீர் கொட்டியது” - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி
Monday September-16 2024

‘96’ பட இயக்குநர் பிராம் குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி இனைந்து நடித்திருக்கும் படம் ‘மெய்யழகன்’...

Recent Gallery