தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் எடுத்துள்ள நயந்தாராவின் ‘அறம்’ தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ள நயந்தாரா, எத்தனை கோடி ரூபாஇ சம்பளம் கொடுத்தாலும் ஒன்றை மட்டும் செய்வதில்லை, என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அது, வேறொ ஒன்றுமில்லை, போலீஸ் யூனிபார்ம் மட்டும் போட மாட்டாராம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நாடித்துள்ள நயந்தாரா, ஒரு காட்சியில் கூட யூனிபார்ம் போடவில்லையாம்.
இது ஏன்?, என்று விசாரிக்கயில் தான் இந்த ரகசியம் கசிந்தது. இயக்குநர் எவ்வளவோ கெஞ்சியும் நயன், போலீஸ் யூனிபார்முக்கு நோ சொல்லிவிட்டாராம். அதுமட்டுமல்ல, தான் போலீஸ் வேடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நடிப்பேன், ஆனால் போலீஸ் யூனிபார்ம் மட்டும் போட்டு நடிக்க மாட்டேன், என்று தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...
ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்...
தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட், தனது அழுத்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம் பிடித்தவர், வெள்ளித்திரையில் அறிமுகமாகிய குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்...