தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளாக உள்ள சகோதரர்களான சூர்யாவும், கார்த்தியும் திருமணம் ஆன பிறகும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் நிலையில், திரைப்படம் ஒன்றின் மூலம் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் கார்த்தி, ”மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக கத்துவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்” என்று கூறி வருகிறார்.
சிங்கம் படங்களில் சூர்யா தான் சத்தமாக பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தான் கார்த்தி மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
கோபக்காராரன சூர்யாவின் காதுக்கு இந்த விஷயம் போக மனுஷன் டென்ஷனாகி விட்டாராம். இந்த விவகாரத்தால் சிவகுமார் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...
ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்...
தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட், தனது அழுத்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம் பிடித்தவர், வெள்ளித்திரையில் அறிமுகமாகிய குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்...