திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா பாலா இயக்கத்தில் நடித்து வரும் ‘நாச்சியார்’ படம் அவருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
சமீபத்தில், வெளியான நாச்சியார் பட டீசரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசும் காட்சி இடம்பெற்றது. இதற்கு பலர் எதிர்ப்பு திவித்து வந்த நிலையில், ஜோதிகா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலயில், மேலும் ஒரு வழக்கு ஜோதிகா மீது கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து வழக்கு தொடப்பதால், ஜோதிகா மீது அவரது மாமனார் சிவகுமார் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகர் மோகன் பாபு, அவரது மகன் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் மற்றும் நடிகர் அர்பித் ரங்கா ஆகியோருடன் ’கண்ணப்பா’ படக்குழு கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்...
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’...
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...