தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக அரை டசன் படங்களில் நடித்து வந்தாலும், பல படங்களில் கெளரவ வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து அவர் பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றுவது எடுபடாமால் போனதால் இனு கெளரவ வேடங்களில் நடிக்க போவதில்லை என்ற முடுவுக்கு வந்துவிட்டார்.
நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, நட்புக்காகதான் கெளரவ வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால், இனி யார் கேட்டாலும், எதற்காகவும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க மாட்டேன், என்று கூறினார்.
இந்த நிலையில், தனது முடிவை நயந்தாராவுக்காக விஜய் சேதுபதி மாற்றிக் கொண்டுள்ளார். நயந்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அவருக்கு ஜோடியாக கெளர வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார்.
ஏற்கனவே, ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி இரண்டாம் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் மோகன் பாபு, அவரது மகன் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் மற்றும் நடிகர் அர்பித் ரங்கா ஆகியோருடன் ’கண்ணப்பா’ படக்குழு கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்...
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’...
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...