நடிகர் விஜயிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நாகராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பேரண் என்று கூறிக்கொண்டு வலம் வந்த நாகராஜ், என்பவர் தான் ஒரு சினிமா பைனான்சியர் என்று கூறி திரையுலகினருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே விஜயின் ‘தலைவா’ படத்திற்கு பிரச்சினை வந்த போது, ஆளுநர் ரோசய்யாவின் மூலம் படத்தை ரிலிஸ் செய்து தருவதாக கூறிய நாகராஜ், விஜயிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஆனால், விஜய் இது குறித்து வெளியே சொல்லவில்லையாம்.
இந்த நிலையில், வேறு ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜியிடம் நடத்திய விசாரணையில், அவர் விஜயிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பழம்பெரும் நடிகர் மோகன் பாபு, அவரது மகன் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் மற்றும் நடிகர் அர்பித் ரங்கா ஆகியோருடன் ’கண்ணப்பா’ படக்குழு கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்...
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’...
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...