அனுஷ்கா, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு, சாய் குமார், பிரம்மானந்தம், சம்பத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’. ராமா என்ற வெங்கடேசபெருமாளின் பக்தர் பற்றிய உண்மை வாழ்க்கை சம்பவமான இப்படத்தினை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் வியந்து போய் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
படம் குறித்து கூறிய சிவகுமார், “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.” என்று பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...