ரஜினி, கமல், விஜய், அஜித் என ஒட்டு மொத்த தமிழ் சினிமா நடிகர்களையும், தமிழ்ப் படங்களையும் கலாய்க்கும் வகையில் வெளியான ‘தமிழ் படம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் ‘ரெண்டாவது படம்’ என்ற இரண்டாவது படத்தை இயக்கி முடித்தாலும், அப்படம் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை.
இந்த நிலையில், மீண்டும் தமிழ் படம் போன்ற ஒரு படத்துடன் களம் இறங்கியுள்ள சி.எஸ்.அமுதன், அப்படத்தை தமிழ் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க உள்ளார். இந்த படத்திற்கு ‘தமிழ் படம் 2.0’ என்று தலைப்பு வைத்து டைடிலிலே ரஜினியை கலாய்த்துள்ளார்கள்.
சிவா ஹீரோவாக னடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் நடிக்க, இவர்களுடன் சதிஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, கஸ்தூரி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம், ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை எழுதி சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்திற்கு கே.சந்துரு வசனம் எழுதுகிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைக்கிறார். கார்கி, சி.எஸ்.அமுதன், தியாகு, கே.சந்துரு ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
ஷசிகாந்த் தயாரிக்கும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...