பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் ‘நாச்சியார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், டீசரின் முடிவில் ஜோதிகா அசிங்கமாக பேசியது தான்.
இதனால், பலர் ஜோதிகாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் கண்டனம் தெரிவித்ததோடு, சிலர் இரண்டு பேர் மீது வழக்கும் தொடர்ந்தார்கள். அதன்படி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பாண்டியன் என்பவர், கரூர் மாவட்ட நீதிமன்ற மாவட்டத்தில் ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஜோதிகா பேசிய வசனத்தால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதி, ஜோதிகா பேசிய வசனத்தால் யார் யார், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், என்ற பட்டியலை நீதுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தலித் பாண்டியனுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி தள்ளி வைத்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...