விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டத்தில், ஒரு அணியினர் தகாத வார்த்தையில் பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் சங்க தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் ஊழல் நடந்திருப்தாகவும் சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு புகார் தெரிவித்தது. விஷால் பதவி விலக வேண்டும் என்றும் சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதன் காரணமாக விஷால் தரப்பினருக்கும், சேரன் தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது எல்லை மீறிப்போனதால் பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர் விஷால் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்த விஷால், ”காழ்ப்புணர்ச்சியால் நல்ல விஷயங்களுக்கு சிலர் தடையாக உள்ளனர். எதிர்ப்பை பதிவு செய்த முறை தவறானது. சங்கத்தில் ஊழல் என ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் தரக்குறைவாக நடந்த செயல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரக்குறைவாக நடந்தவர்களை நீதிபதி கவனித்து கொண்டிருந்தார்” என கூறினார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...